தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீது தொழிலதிபர் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பாகுபலி வில்லன்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் ராணா டகுபதி, தமிழில் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பாகுபலி படத்திற்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும், காடன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் விராட்டபர்வம் என்ற படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அபகரிக்க முயற்சி

பிரபலமான நடிகராக இருக்கும் இவர் மீது தற்போது கிரிமினல் வழக்கு பாய்ந்துள்ளது. ராணா மற்றும் அவரின் தந்தை, தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தொழிலதிபர் பிரமோத் என்பவர் கிரிமினல் வழக்கு கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2014 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் ஹோட்டல் அமைக்க போவதாக கூறி ராணா மற்றும் அவரின் தந்தை என்னிடம் குத்தகைக்கு எடுத்தனர். அவர்களுக்கு நான் எழுதிக் கொடுத்த குத்தகைக்கான காலம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிந்துவிட்ட நிலையில், அந்த இடத்தை ராணாவின் தந்தை சுரேஷ் பாபு ரூ.18 கோடிக்கு விற்பனை செய்ய முயன்று உள்ளார். அதை கேட்டால் இடத்தை ஒப்படைக்க முடியாது என பிரச்சனை செய்வதாகவும், அதனால் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் போனதாகவும் தொழிலதிபர் பிரமோத் குமார் கூறியுள்ளார். அடியாட்களை வைத்து ராணாவும், அவரின் தந்தையும் தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தொழிலதிபர் பிரமோத் குமார் கூறியுள்ளார்.

நேரில் ஆஜர்

இதுகுறித்து ஏற்கனவே பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ராணாவும், அவரின் தந்தையும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here