திருமண நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமாக உடை அணிந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுதுடன் ட்ரோல்களுக்கும் ஆளாகியுள்ளது.

முன்னணி நடிகை

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழியிலும் பிஸியாக இருக்கக்கூடியவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார்.

பல படங்கள்

கடந்தாண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாணி காகிதம் திரைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகனுடன் இவர் இணைந்து நடித்த வித்தியாசமான கதாபாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் போன்ற படங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து போஸ்ட்ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் போன்ற பலரும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சர்ச்சையான உடை

இந்நிலையில், சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரங்குதே என்ற தெலுங்கு படத்தின் இயக்குநரின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமக்களான அட்டலூரி மற்றும் பூஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். திருமணத்தில் வித்தியாசமாக உடை அணிந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுதுடன் பல பேரின் ட்ரோல்களுக்கும் ஆளாகியுள்ளது. பல நிறங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆடை ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும் பிரபலங்களாக இருப்பதனால் அவர்கள் அணியும் ஒவ்வொரு பொருளும் பேச்சுப் பொருளாகவே மாறி வருகின்றது. பல பேர் அவரது உடையை கேலி செய்தாலும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here