12 ஆண்டுகளுக்கு பின் ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியில் இருந்த நடிகர் நரேன் தனது மகன் பெயர் சூட்டு விழாவை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

சிறந்த நடிப்பு

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நரேன். மலையாள மொழியில் பல படங்களில் நடித்துள்ள நரேன், இயக்குநர் மிஷிக்கினின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை, கோ, முகமூடி, கைதி உள்ளிட்ட பல நடித்துள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் நரேன் நடித்திருந்தார்.

“ஓம்கார் நரேன்”

நடிகர் நரேன் மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 14 வயதில் தன்மயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்திருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாதம் அறிவித்தார் நரேன். இந்நிலையில் தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ள நரேன், அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகனின் பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் நரேன். அதன்படி தனது மகனுக்கு நடிகர் நரேன், ‘ஓம்கார் நரேன்’ என பெயர் சூட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் நரேனுக்கும், அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here