காலையில் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து நடிகர் ரஜினிகாந்த் அதனைதொடர்ந்து தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.

திருப்பதியில் தரிசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ‘சுப்ரபாத சேவையில்’ பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ரஜினிகாந்தை தேவசம் போர்டு செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார். சாமி தரிசனம் செய்தப் பின் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர்.

தர்காவில் வழிபாடு

அதைதொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றம்அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஆந்திராவின் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் பீர் தர்காவுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது கூறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here