தனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டுகொள்ள மாட்டேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்கள்

கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிஸி நடிகை

‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கி வரும் இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக பு’ஷ்பா’ படத்தின் 2-ம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.

கண்டுக்கே மாட்டேன்

இந்த நிலையில், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். “வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும். ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள், அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டுகொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here