மாண்டஸ் புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாண்டாஸ்’ புயல்

“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு பகுதி 460 கி.மீ தொலைவிலும் ‘மாண்டாஸ்’ புயல் நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கக்கூடும். கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்பொழுது 12 கிலோ மீட்டர் மேகமாக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை

‘மாண்டஸ்’ புயல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை (டிச.,9) 8 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here