கடவுளின் அருளால் நடிகர் சிம்புக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என அவரது தந்தை டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தனக்கென தனி இடம்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக தமிழ் சினிமாவை ஆண்டவர்தான் சிம்பு. நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், நடன கலைஞர் போன்ற பன்முகம் கொண்ட சிம்பு, தனது தந்தை டி. ராஜேந்தர் முலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சிம்பு. இதன்பின் தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதன்பின்னர் பல படங்களில் நடித்து, வெற்றிகளை குவித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குட் நியூஸ்

சிம்புக்கு திருமணம் எப்போது? என ரசிகர்கள் சில காலமாக கேள்வி மத்தியில் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தையும், இயக்குநர் – நடிகருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here