எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் தன் மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

தனித்திறமை

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுதான் நான்!

இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”சினிமாவில் எத்தனை உடைகளை மாற்றினாலும், எந்த விதமான உடை அணிந்தாலும், எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் என் மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன். வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களுக்கு பிடித்தது போல வாழ்வதுதான். அனைவருக்கும் பிடித்தது போல உடை அணிவது, பேசுவது, நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான வேலை. ஏனென்றால் அடுத்தவர்கள் நம்மை எப்படி ஆமோதிக்கிறார்கள் என்பது அடிக்கடி மாறிவிடும். அது மிகவும் ஆபத்தானது. அதனால் தான் அனைவரையும் திருப்தி படுத்தவேண்டும் என்று நினைக்காமல், மனதுக்கு சந்தோஷம் எதுவோ அப்படியே இருந்து கொள்வது, நடந்து கொள்வது மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் அப்படி வாழ்வதற்குதான் விரும்புவேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here