எத்தனையோ போராட்டங்களில் ஜெயித்த சமந்தா தற்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினையில் இருந்தும் மீள்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

நம்பிக்கை உள்ளது

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தா, தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். தற்போது வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் அவர், விரைவில் உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ”எத்தனையோ போராட்டங்களில் ஜெயித்த நான் தற்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினையில் இருந்தும் மீள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில நல்ல நாட்கள் இருக்கும் சில கெட்ட நாட்களும் இருக்கும். அடுத்து இதற்கு மேல் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது போல் இருக்கிறது என நான் பயந்த சந்தர்ப்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. தினமும் நிறைய பேருக்கு எத்தனையோ சவால்களுடன் போராட வேண்டி இருக்கும். நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஒரு முறை எதையாவது முடிவு செய்தால் அதை செய்தே தீருவேன். இவ்வாறு சமந்தா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here