திரிஷியம் படத்தின் 3-ம் பாகத்துக்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாக இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றி

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் திரிஷியம். திரில்லர் வகையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, 2-ம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி யடைந்தது.

வரவேற்பு

திரிஷியம் திரைப்படம் கமல்ஹாசன் – கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைப் போன்றே தமிழில் வெளியான பாபநாசம் படத்திற்கும் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் திரிஷியம் படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

3-ம் பாகம்?

திரிஷியம் படத்தின் 3-ம் பாகம் வருமா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திரிஷியம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் தன்னிடம் உள்ளதாகவும், அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here