மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விபத்து

மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை பெதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் பேருந்து மீது பயங்கர மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூங்கியதால் விபரீதம்

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிமலா பிரசாத், படுகாயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிய போது ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here