பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

பாலிவுட் நடிகை

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் அண்மையில் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரண் ஜோக்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

சூழ்ந்த ரசிகர்கள்

கரீனா கபூர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய அவரை ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுப்பதற்காக சூழ்ந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள், அவரை தள்ளவும் செய்துள்ளனர். இதனையடுத்து நடிகையின் பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் நடிகை கரீனா கபூர் விமான நிலையத்திற்கு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here