விஜய் தேவரகொண்டா உடனான காதல் குறித்து கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ‘அது ஒரு கியூட் வதந்தி’ எனக் கூறியுள்ளார்.

பிஸி நடிகை

கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். இந்திய திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக அமிதாப் பச்சனுடன் ‘குட் டே’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’, அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா – 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து, பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.

கியூட் வதந்தி

‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போதிலிருந்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், விஜய்தேவரகொண்டாவுடனான காதல் வந்ததி குறித்து ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “இது ஒரு குயூட் வந்ததி” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here