ஏ.ஆர் ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி என்றால் வைரமுத்து பாடல்கள் இடம் பெறாமல் இருக்காது. தமிழனின் பெருமைகளை தனது பாடல் வரிகளின் மூலம் உணர்ச்சிகள் குறையாமல் கொடுக்கும் வைரமுத்து, தமிழர்களின் பெருமைகளை பேசும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பாடல்கள் எழுதாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்; “நான், ஏ.ஆர் ரஹ்மான், வைரமுத்து மூன்று பேரும் இணைந்து நிறைய படம் பண்ணிருக்கிறோம். வைரமுத்துவின் கவிதைகளை பாடலாக மாற்றியிருக்கிறோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதையும் தாண்டி நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி என்பது மிகவும் வளமையான மொழி. அதில் சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அதனால் தான் புது புது எழுத்தாளர்கள் வருகிறார்கள். அதேபோல்தான் இதுவும். பொன்னியின் செல்வன் படத்திற்கு வைரமுத்துவை பயன்படுத்தாமல் புது ஆட்களைப் பயன்படுத்தினோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here