ஜூன் 9-ம் தேதி நயன்தாராவுக்கும் – தனக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; திருப்பதியில் திருமணம் செய்ய முடிவெடுத்து செயல்பட்டோம். ஆனால், பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவை மாற்றினோம். எங்களுடைய திருமணம் 9ஆம் தேதி நடைபெறும். எங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தினருக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய உள்ளோம். இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here