சென்னையில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 புதிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. ஜாபர்கான்பேட்டை ஜவஹர்லால் நேரு சாலையில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here