ஆதிமுகவில் எல்லோரும் தன்னை எதிர்க்கவில்லை என்றும் பதவிக்காக ஒருசிலர் தனக்கு எதிராக பேசுவதாகவும் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

100% நம்பிக்கை

சென்னையில் அதிமுக நிர்வாகி குணசேகரனின் இல்ல திருமண விழாவில் வி.கே.சசிகலா கலந்துகொண்டார். திருமண மண்டபத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து மண்டபத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் மணமக்களை வாழ்த்தினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது; ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரும், அம்மா ஜெயலலிதாவும் மக்களுக்காக செயல்பட்டனர். என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சசிகலா கேள்வி?

அதிமுகவில் என்னை இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. பதவிக்காக ஒருசிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இணைவது தொண்டர்களின் கையில் தான் உள்ளது. நான் தொண்டர்களையும் பார்க்கிறேன், மக்களையும் பார்க்கிறேன். அதிமுக தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படும்; அந்த நிலைமை தற்போது இல்லை. அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here