கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் கால் தவறி  கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள ஸ்ரீனிவாசசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் நிரம்பி வழியும் அணையின் அழகை காண, சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், அணை பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர், ஆர்வ மிகுதியில் அதன் தடுப்புச்சுவர் மீது ஏறியுள்ளார். பாதி சுவர் ஏறிய நிலையில், மீதி சுவரை ஏற முடியாமல் தவித்த அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுவரில் இருந்து இளைஞர் தவறி விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here