தனது நடிப்பு திறமையால் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சாய் பல்லவி சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை ஏக்கமடையச் செய்துள்ளது.

நடிப்பும், சிரிப்பும்

2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. எத்தனையோ ஆசிரியர் கதாபாத்திரங்கள் வந்தாலும், ‘மலர்’ டீச்சரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது நடிப்பும், சிரிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. அதனைதொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து மலையாளத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் சாய் பல்லவி. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்திருக்கிறார்.

தள்ளிப்போகும் ரிலீஸ்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் சாய் பல்லவி அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தற்போது படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகாமல்  இருக்கிறார் சாய் பல்லவி. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘ஷியாம் சிங்காராய்’ படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ராணா டகுபதியுடன் ‘விராட பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம்  ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

கோலிவுட்டில் கிசுகிசு

இந்த நிலையில், சாய் பல்லவியை தேடி வரும் படவாய்ப்புகளை அவர் நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடுக்கிறதோ? என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சாய்பல்லவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அதனால்தான் படங்களில் கமிட்டாகாமல் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here