கவர்ச்சியாகவும், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்து

பொதுவாகவே ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க அனைவரும் தயங்குவர். சில நடிகைகள் சினிமாவை விட்டே விலகி விடுவர். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி ஏதும் நடக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் ஒரு முன்னணி கதாநாயகியாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படமும் சமந்தாவுக்கு ஹிட் கொடுத்தது.

எதுனாலும் ஓகே

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சமந்தா, கவர்ச்சி, ஆக்ஷன் என எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அப்படி நடிக்க தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும், நிறைய படங்களில் நடித்த பிறகு அந்த நம்பிக்கை வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here