தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டம்

‘பாகுபலி’ எனும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்தவர் பிரபல இயக்குநர் ராஜமவுலி. ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR). ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது. படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி ‘RRR’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

கனவு நினைவானது

‘RRR’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை ஆலியா பட் மனம் திறந்து பேசியுள்ளார். தனது திரையுலக பயணத்தை தமிழ் படத்தில்தான் ஆரம்பித்தாகவும், இப்போது இங்கு மீண்டும் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நடித்ததில் ஒரு கனவு நனவானதாக கூறியுள்ள அவர், பாலிவுட் படத்தில் மட்டுமே நடிப்பதை விரும்பவில்லை என்றும் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பின்போது ரசிகர்கள் தன்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனதாகவும் ஆலியா பட் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here