தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 13 வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது வழிநெடுங்கிளும் காத்திருந்த பொதுமக்கள் மலர்களை தூவி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here