நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பு இருந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து கமல்ஹாசன் மீண்டு வந்தார். இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் கட்டாய ஓய்வில் இருந்தார். இந்நிலையில் ஓய்வு முடிந்து பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார்.

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும்

முன்னதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here