சென்னை மாநகருக்கு இணையாக கோவையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சிறப்புரையாற்றிய அவர், தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை மாற்றப்படும் என்றார். வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் திமுக அரசு பணியாற்றி வருவதாகவும், அனைத்து மாவட்ட மக்களும் தன்னுடைய மக்கள் என்ற நினைவிலேயே உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here