கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருந்தவர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான இவரை, கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை உடற்பயிற்சி மேற்கொன்டிருந்த போது புனித் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புனித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புனித் மரணம் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷால், நாசர், நடிகைகள் சிம்ரன், ராதிகா, குஷ்பு, சாயிஷா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். புனித்தின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here