விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன் துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ளது. முதல் புரோமோ சண்டையுடனும், இரண்டாவது புரோமோ மோட்டிவேஷனலுடனும் இருக்க, அதில் பிரியங்காவை காணவில்லையே என ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாவது புரோமோ முழுக்க பிரியங்காவே இடம் பிடித்து விட்டார். ராஜூ, சின்னப்பொண்ணுவிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பங்கமாய் கலாய்த்துவிட்டார் பிரியங்கா. அப்போது சின்னப்பொண்ணுவிற்கு ராஜூ நேற்று டிஸ்லைக் சிம்பிள் கொடுத்ததற்காக அவர் என்ன மாதிரி பேசுவார் என்று அவரைப்போலவே பேசி கலாய்த்துக் கொண்டு இருந்தார் பிரியங்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here