விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான முதல் புரோமோவில், இமான் அண்ணாச்சி தனது கதையை கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில், பிக்பாஸ் டைட்டிலை ஒரு நகைச்சுவை நடிகர் வென்றால் நன்றாக இருக்கும் என்று இமான் அண்ணாச்சி கூற, அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது. இதையடுத்து நமீதா ’கஷ்டப்படுறோம் கஷ்டப்படுறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும்’ என்று கூறுகிறார். இன்னொரு புறம் நிரூப் மற்றும் அபிஷேக் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here