படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகை நமீதா சீரியலில் நடித்து வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மனம் கவர்ந்த நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இளைஞர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் நமீதாவின் சொல்லுக்கு ரசிகர்கள் மயங்கியே போனார்கள். தமிழில் பட வாய்ப்புகள் குறையவே மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றார் நமீதா. மேலும் பிக் பாஸ் சீசன் 1, ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் என சின்னத்திரையிலும் கலக்கினார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

சிகர்கள் ஷாக்

தற்போது நடிகை நமீதாவின் கைவசம் ‘பவ் பவ்’ என்கிற திரைப்படம் மட்டுமே உள்ளது. இதுதவிர வேறு பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் சீரியலில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்கிற சீரியலில் நடித்து வரும் நமீதா, அதில் முழுமையாக நடிக்க உள்ளாரா? அல்லது கவுரவ வேடமா? என்பது விரைவில் தெரிய வரும். நடிகை நமீதா திடீரென சீரியலில் நடிக்க வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here