சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும், அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த யாஷிகா, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்போதுதான் தோழி இறந்த தகவலை அவருக்கு தெரிவித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த யாஷிகா, தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோசமான விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது எனது உயிர் தோழியை பறித்துக்கொண்ட கடவுளை பழிப்பதா? என்று தனக்கு தெரியவில்லை எனக் கூறியுள்ளார். கார் ஓட்டும்போது தான் மது அருந்தி இருந்ததாக வதந்தி கிளப்புவதாகவும், தான் மது அருந்தவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் யாஷிகா குறிப்பிட்டுள்ளார். போலியான நபர்கள் சிலர் போலி செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடக்கிறது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here