சினிமா வாழ்வையும், ரியல் வாழ்க்கையையும் பிரிக்க முயற்சித்து வருவதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன்பின் விஜய், அரவிந்த்சாமி, தனுஷ், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரைப்படங்களிலும் அமலா பால் நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதன்பின் மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். ‘ஆடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்ற அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அமலா பால் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் நிறைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அதனை ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தவறாக புரிந்து கொண்டேன்

இந்த நிலையில், தனது திரையுலக பயணம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நடிகை அமலா பால் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இப்போதும் நான் நானாக இருக்கிறேன். 2020ல் என் அப்பா இறந்தது, நான் எதிர்கொண்ட விஷயங்கள் எல்லாம் எனக்கான சுயபரிசோதனை காலமாகவே இருந்தது. திறந்த புத்தமாக என்னை உணர்ந்தேன். எனக்கென்று வாழ்க்கை எதுவும் இல்லை. என் வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதை உணர்ந்தேன். தற்போது சினிமா வாழ்வையும், ரியல் வாழ்க்கையையும் பிரிக்க முயற்சி செய்கிறேன். இவ்வாறு அமலா பால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here