2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்ததுடன், அபராத தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here