மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன்ட்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவரது நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இளம் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் சுஷாந்த் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

கைது, விசாரணை

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரது காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், போதை பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, எடுத்து சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை ரியா, அவரது சகோதரர் சோவிக், வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த நிலையில், சுஷாந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து போதைப் பொருள் பயன்படுத்தினார்கள் என ரியா சக்ரபோர்த்தி தெரிவித்து உள்ளார். தன்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த் சிங் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் ரியா அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here