கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தொண்டர்களைச் சந்திக்க வருகிறேன் என சசிகலா பேசும் புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் முடிவு

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். அவருக்கு ஏராளமான அ.ம.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வந்தால், அதிமுக நிர்வாகிகள் பலர் அவர் பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சசிகலா திடீரென அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விரைவில் வருகிறேன்

இந்தச் சூழலில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே சில ஆடியோக்கள் வெளியான நிலையில், தற்போது 5-வது ஆடியோவும் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தில் வசிக்கும் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசியதாவது; தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். புரிகிறது. இந்த கொரோனா தாக்கம் முடிந்த பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருவேன். எதுக்கும் பயப்படாதீங்க. என்று ஆறுதல் சொல்லும் ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here