திருவள்ளூர் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கான பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக கூறினார். அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய வரும் என்றும் கொரோனாவை வெல்ல மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here