கொரோனா நிவாரண நிதிக்காக சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் 50 லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

பிரபலங்கள் நன்கொடை

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் நடிகர் அஜித், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

சத்யபாமா பல்கலைக்கழகம் நிதியுதவி

அந்த வகையில், தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாகடர் மரியஜூனா ஜான்சன் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின் போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கிருஷ்ணசாமி மற்றும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here