தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவ்வப்போது வருமானவரித் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அதேபோல், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன், கரூரில் செந்தில்பாலாஜி இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஐ.டி. ரெய்டு போன்ற பூச்சாண்டுகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here