கொரோனா தாக்கத்தால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
லேசான கொரோனா தொற்று இருப்பதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, எஸ்.பி.பிக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில், அவரது சீராக இருப்பதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
மீண்டு வரும் எஸ்.பி.பி
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார். அதனைதொடர்ந்து எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.















































