‘ஆம்பன்’ புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

வெயில் கொளுத்தும்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கும்.

அறிவுரை

வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here