விஜயகாந்திற்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்போடு ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

வரவேற்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள அம்மன் கோயிலில் நடிகர் விஷால் தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; “மாநாடு ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்போடு ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான். சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. கோடிக்கணக்கில் வியாபாரம் இருக்கும் ஒரு நடிகர் அதை விட்டுவிட்டு மக்களுக்கு பணி செய்ய வருவது வரவேற்கத்தக்கது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காத்திருக்கிறேன்

மாநாட்டில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய்க்கு கடவுள் அருள் உண்டு. அது ஜீசசாக இருந்தாலும் சரி, அல்லாவாக இருந்தாலும் சரி, அம்மனாக இருந்தாலும் சரி… அவருக்கு அந்த ஆசீர்வாதம் இருக்கும். அவருக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே உண்டு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here