தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் நயன்தாரா படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விலகல்?

‘நானும் ரவுடி தான்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், ஒரு ஹீரோயினாக நயன்தாராவும், இன்னொரு ஹீரோயினாக சமந்தாவும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

முக்கியத்துவம் இல்லை

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும், இரண்டாவது ஹீரோயினாகத் தான் கருதப்படுவார் என உணர்ந்ததாலும் சமந்தா விலகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சொந்த காரணங்களுக்காகவே படத்தில் இருந்து விலகுவதாக விக்னேஷ் சிவனிடம் அவர் தெரிவித்துவிட்டாராம். சமந்தா விலகியதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் அல்லது திரிஷாவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாகக் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here