‘தங்கலான்’ படத்திற்காக சுமார் 5 மணி நேரம் மேக்கப் போடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இப்பபடத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த போது, நடிகர் விகரம் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, முழு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படக்குழுவினர் ஷுட்டிங்கை சிறிது காலம் தள்ளி வைத்தனர். தற்போது விக்ரம் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சவாலாக உள்ளது

இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்தப் படத்திற்காக மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்து, “நான் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மேக்கப் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றிற்காக செலவழிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்”. ‘தங்கலான்’ படத்திற்காக அவர் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here