வி.ஐ.டி. போ பால் பல்கலைக்கழகத்தின் “சன்ஸ்கிருதி சமாகம்” எனும் தனித்துவமான கலாச்சார விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது.
இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த விழா, அக்டோபர் 11, சனிக்கிழமை அன்று, மத்தியப் பிரதேசத்தில் போபாலின் ஆவிரிதி, இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மனவ் சங்க்ரஹாலயா, ஷ்யாம்லா ஹில்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கலை ஞர்கள் பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், ஜாசு கான், அனன்யா சக்ரவர்த்தி, மற்றும் வர்ஷிணி சங்கர் ஆகியோர் தங்கள் கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்திய பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர்.
மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடை பெற்றது. விழா ஏற்பாடு செ ய்யப்பட்ட இடம் முழுவதும் பசுமையும் மரங்களும் மற்றும் மலர்களால் எழில் கொண்டு சூழப்பட்டு அழகாக காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஏரிக்கரையைச் சுற்றி வானில் ஒளி மற்றும் ஒத்திசைவு மிகுந்த பல்வேறு விதமான காட்சிகளை உருவாக்கி. இதில் வியத்தகு காட்சிகளாக இந்திய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவம் , மத்திய பிரதேசத்தின் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களின் உருவம், மற்றும் மாநிலத்தின் ஆட்சி, வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி முக்கிய வளர்ச்சி முயற்சிகள் போன்றவற்றை காட்சிப்படுத்தின.
இந்த ட்ரோன் நிகழ்ச்சி, வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நாட்டின் சுயநிறைவு நோக்கத்துடன் இணைந்து, எதிர்காலத்துக்கு தயாரான, தொழில்நுட்ப திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது.
இந்நிகழ்வை , வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத்தலைவர் திரு. சங்கர் விசுவநாதன் , அறக்கட்டளை உறுப்பினர் திருமதி ரமணி பாலசுந்தரம், மற்றும் புதுமணத்தம்பதிகள் திருமதி காதம்பரி ச விசுவநாதன் (உதவி துணைத் தலைவர், வி.ஐ.டி.) மற்றும் டாக்டர் ஏ. ஸ்ரவண் கிருஷ்ணா ஆகியோரின் தலைமையில் நடை பெற்றது.
மாநிலம் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், நிர்வாக மற்றும் கல்வித்துறையின் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
“சன்ஸ்கிருதி சமாகம்” மத்தியப் பிரதே சத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது — பாரம்பரியத்தின் ஆன்மாவையும், தொழில்நுட்பத்தின் ஒளியையும் ஒருங்கிணைத்து மறக்க முடியாத ஒரு இரவை உருவாக்கியது. இந்தியாவின் வேர்களை யும் அதன் எதிர்கால கனவுகளையும் இணைக்கும் பாலமாக, வி.ஐ.டி. போபால் மீண்டும் ஒரு முறை தன் முன்னணித்தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது.
சன்ஸ்கிருதி சமாகம்” – பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.