சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தங்கம்
இந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், சில தினங்களில் சொற்ப அளவில் குறைவதும் வாடிக்கையாநது.
திடீர் உயர்வு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஆக.,20 ஆம் தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், 21 ஆம் தேதி ரூ.400 உயர்ந்தது. இதனிடையே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315க்கும், சவரன் ரூ.800 உயர்ந்து ரூ.74,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.130க்கும், ஒரு கிலோ கட்டி ரூ.2,000 உயர்ந்து ரூ,1,30,000க்கும் விற்பனையாகிறது.