சென்னையில் நடைபெற்ற மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழாவில் ஆளுநர், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு

சென்னை மீனாட்சி மற்றும் ஸ்ரீ முத்துகுமரன் கல்வி நிறுவனர் மறைந்த திரு. ஏ.என்.ராதாகிருஷ்ணன் – திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் – திரு. பிரபாகர் எட்வர்டு மெகர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் அவர்களின் மகன் திரு. ஆகாஷ் பிரபாகர் (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும், சென்னை E.V.P. குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. E.V. பெருமாள்சாமி ரெட்டி – திருமதி E.V.P. ராஜேஸ்வரி அவர்களின் பேத்தியும் திரு. சி.எம்.கிஷோர் ரெட்டி – திருமதி. லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் செல்வி. அஷ்மிதா ரெட்டிக்கும் சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவேற்காடில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மணமக்களுக்கு வாழ்த்து

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் திரு. வி.என். ரவி வருகை தந்து மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக் பேராசியர் பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிற்கல்வி மருத்துவக்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். வாழ்த்துக்கள் நல்கிய நல் இதயங்களுக்கு மணமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஜூலை 2 ஆம் தேதி காலை 7 மணி அளவில் சென்னை (R.K. CONVENTION CENTRE CHENNAI) ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here