கஜோலின் ”மா” படத்துடன் தனது படம் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து நடிகை சோனாக்சி சின்ஹா மனம் திறந்து பேசியுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் மோதல்

விஷால் ரேவன்டி இயக்கத்தில் கஜோல், ரோனித் டோலி, ஜிடின் ஜோதி குலாதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மா’. அதேபோல், குஷ் சின்ஹா ​​இயக்கத்தில் சோனாக்சி சின்ஹா, அர்ஜுன் ராம்பால், பரேஷ் ராவல், போக்டானா ஓர்லினோவா, சமி ஜோனாஸ் ஹீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிகிதா ராய்’. இந்த இரண்டு திரைப்படங்களும் ஜூன் 27 ஆம் திரைக்கு வர இருக்கிறது.

பெருமையா இருக்கு

இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோத இருப்பதையொட்டி, கஜோலின் ‘மா’ படத்துடன் தனது ‘நிகிதா ராய்’ திரைப்படம் வெளியாவது பெருமையாக இருப்பதாக நடிகை சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார். மேலும் ”இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய படம் வெளிவருகிறது, மற்றொரு படத்துடன் மோதுகிறது. அது திரைத்துறை வாழ்க்கையில் ஒரு பகுதி” என் சோனாக்சி தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here