விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு தயக்கம் காட்டியது குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹிட் படங்கள்

தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பல ரசிகர்களை உருவாக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, கத்தி, தங்க மகன், தெறி, மெர்சல் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிய தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.

முன்னணி நடிகை

சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் மூலம் சமந்தாவின் வேறு பரிமாணத்தை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. விவாகரத்து, மையோசிட்டிஸ் என்ற அரியவகை நோய், சர்ச்சைகள் என பல இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தற்போதும் முன்னிலை நடிகையாக முன்னேறி வருகிறார் சமந்தா.

மறுத்தேன்

இந்நிலையில் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு தயக்கம் காட்டுவது குறித்து சமந்தா மனம் திறந்து கூறியிருக்கிறார். இதுபற்றி அவரே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “கடந்த 3 வருடங்களில் 15 விளம்பரப் பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டேன். இந்த படங்களில் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் பணம் வந்திருக்கும். இப்போது விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக மருத்துவர்களிடம் கருத்துக் கேட்டுவிட்டு அதன் பின்னர்தான் நடிக்க முடிவெடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here