அதிக செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகை

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

நடிக்க மாட்டேன்

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் நிகழ்ச்சி ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், “நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்று தான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here