இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா இன்று தனது உறவுக்காரப் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஜொலிக்க முடியவில்லை

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பு’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையிலகில் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த அவரால் தமிழ் திரையுலகில் ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தன் அண்ணன் இயக்கத்தில் வெளியான வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்திருந்தார்.

திருமணம் – விவாகரத்து

அவருக்கும் பாடகி அம்ருதா சுரேஷுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் விவாகரத்து பெற்றனர். அம்ருதாவை பிரிந்த பிறகு, டாக்டர் எலிசபெத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாலா. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து குணம் பெறும் வரை அவரை எலிசபெத் தான் பத்திரமாக பார்த்துக் கொண்டார். இந்நிலையில் எலிசபெத்தும், பாலாவும் ஏன் பிரிந்தார்கள் என தெரியவில்லை. 

கனவு நிறைவேறியது

இந்த நேரத்தில் சென்னையை சேர்ந்த கோகிலா என்கிற பெண்ணை எர்ணாகுளம் கோவிலில் வைத்து நடிகர் பாலா இன்று திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இது அவரின் நான்காவது திருமணமாகும். கோகிலாவுடன் திருமணம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பாலா பேசுகையில்; “கோகிலா என் சொந்தக்கார பெண். இந்த நேரத்தில் என் அம்மா எங்களுடன் கோவிலுக்கு வந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். அம்மாவுக்கு 74 வயதாகிறது. அவரின் உடல்நிலை சரியில்லை. ஆனால் என் திருமணத்தில் கலந்துகொள்ள விரும்பினார் அவர். இந்த திருமணம் மூலம் கோகிலாவின் நீண்ட கால கனவு நிறைவேறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here