நடிகர் கார்த்தி தன்னுடைய படத்துக்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்று ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.

சர்ச்சை

‘மெய்யழகன்’ திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு குறித்து பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். திருப்பதி லட்டு பல லட்சம் மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதை சினிமா நிகழ்ச்சிகளில் வேடிக்கைப் பொருளாக பேசுவது சரியல்ல எனக் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்தி மன்னிப்புக் கேட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கார்த்தி மீது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

விளக்கம்

தன்னுடைய ‘மெய்யழகன்’ திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காகதான் கார்த்தி, இவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர். இதற்கு தற்போது துணை முதல்வர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். அதில் “கார்த்தி தன்னுடைய படத்துக்காக மன்னிப்புக் கேட்கவில்லை. அவர் பேசிய கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார். நடிகர்கள் ஒரு கருத்தை சொல்லும்போது அது மக்களிடம் எளிமையாக சென்றுவிடும்” எனக் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here