இந்தி தெரியாத காரணத்தால் நடிகை சன்னி லியோனிடம் பேச முடியவில்லை என இயக்குநர் பேரரசு நகைச்சுவையாக பேசினார்.

‘பேட்ட ராப்’

இயக்குநர் எஸ்.ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’. பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் இப்டடத்தில் நடித்துள்ளனர். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரெண்டு வார்த்த பேச முடியல

‘பேட்ட ராப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசுகையில்; “சில வருஷங்களுக்கு முன்னால் இந்தி தெரியாது போடான்னு சொல்லி ட்ரண்ட் பண்ணாங்க. சிலர் அதே வாசகத்த எழுதி டிஷர்ட்டும் போட்டாங்க. அப்ப சந்தோஷமா இருந்தது. ஆனா இப்ப வருத்தமா இருக்கு. என் பக்கத்துல சன்னி லியோ உக்காந்திருந்தாங்க. அவங்க கிட்ட ரெண்டு வார்த்த பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்” என நகைச்சுவையாக பேசியுள்ளார். சமீபகாலமாக பேரரசு பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இதுபோன்ற கருத்துகளை நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here